Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மே 30, 2020 06:22


ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைப்புச்செய்திகள்